தொலைந்து போனவனின் அறிவிப்பு

என் கண்களில் சுடரும் மெழுகுவர்த்திகளை நீ ஊதி அணைக்கலாம் எனது உதடுகளில் ஜீவிக்கும் முத்தங்களை உறைந்து போகச் செய்யலாம் என் சொந்த பூமியின் காற்றை சாபங்களால் நிறைக்கலாம் தீனக்குரலை மடியச் செய்யலாம் எனது நாணயங்களை செல்லாததாக்கலாம் என் குழந்தைகளின் முகங்களில் புன்னகையை வேரோடு பிடுங்கி எறியலாம் ஆயிரம் சுவர்களை எழுப்பலாம் கண்களில் ஊசி இறக்கி வேதனையில் துடிக்க வைக்கலாம் மனித எதிரியே சமாதானம் இல்லை ஒரு போதும் இறுதிவரை நான் போராடுவேன்.
August 27, 2006 | பிரிவுகள்: மகரந்தம் | மேலும் வாசிக்க »


