insurance, versicherung, mobile, phone, sales, tax, download, security, mortgage, download, upload, krankenversicherung, private

பிரிவு: ‘குஞ்சரம்’

வாங்கல் – கொடுக்கல் – தவணை செலுத்தல்

வாங்கல் – கொடுக்கல் – தவணை செலுத்தல்

சென்ற கோடைவிடுமுறை இலண்டன் மாநகர வலமாக அமைந்தது. நீண்ட இடைவெளியின் பின்னான சந்திப்புகளும் உறவாடல்களும் சுற்றுலாக்களுமாக நாட்கள் கழிந்தன. இலண்டன் மாநகருக்குள் வாகனத்தில் செல்வது இரவில் மட்டும் சாத்தியமாகவுள்ளதை பல நட்புகள் தெரிவிதிருந்தமை என்னை ஆச்சரியமூட்டியது. வீதி ஒழுங்குக் கெடுபிடிகளும், கமெராக்களும் நம்மவருக்கு நிறையவே பட்டறிவைக் கொடுத்திருந்தன.இதில் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தது தானியங்கிக் கமெராக்களின் ஆளுகைதான்.

கைநாட்டு

கைநாட்டு

இந்த உலகமயமாக்கல் யுகத்தில் நாடுகளை ஆட்டிப்படைப்பது உலகவங்கி என்றால் எமது வாழ்வைத் தீர்மானித்து ஆட்டிப்படைப்பது நடைமுறையிலுள்ள வங்கிகள்தான். வங்கியின் பிடியிலிருந்து விடுபடல் என்பது நடக்கிற காரியமில்லை, தற்கொலைக்குச் சமமானது. வங்கிகளில்தான் உடனுக்குடன் புதிய தொழில்நுட்பமும் அறிமுகமாகும். இப்போது எல்லாத் தொடர்பாடல்களையும் இயந்திரத்தினூடாக மேற்கொள்வதான நடைமுறையும் வந்துவிட்டது.

மடம் வீட்டு வேலை

மடம் வீட்டு வேலை

மாலதி பாரிஸ் நகரை அண்டிய புறநகர்ப் பகுதியில் கடந்த பத்தாண்டு காலமாக வாழ்ந்து வருகிறாள். இங்கு வந்து பெரிதாக வேலை என்று பார்த்ததில்லை. ஆனால் தாயகத்தில் நீண்ட காலம் வேலை பார்த்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவம் இந்த நாட்டிற்கு உதவாது. என்றாலும் மனதிற்குள் ஓர் உழைச்சல். ஐந்து வயதில் பாடசாலைக்குப் போனதிலிருந்து தொடர்ந்து படிப்பு பின்னர் வேலை என்றிருந்த அவளுக்கு பிரான்சுக்கு வந்து வீட்டிற்குள் இருப்பது மனஅழுத்தத்தைத் கொடுத்தது.

நச்சுவிதை

நச்சுவிதை

இரண்டு வயதில் பிரான்சுக்கு வந்த என்னுடைய மகனுக்கு இப்பொழுது பதினைந்து வயது. உயர்கல்விக்கான பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கிறான். அந்தப் பாடசாலையை என்று அழைப்பார்கள். எமது கிராமத்தில் பத்துப் பதினைந்த தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. ஆனால் ஒன்பதாம் வகுப்புவரை அவனுடன் தமிழ்ப் பிள்ளைகள் எவரும்படித்ததில்லை. தற்பொழுதுதான் தமிழ்ப் பிள்ளைகள் அவனுடன் படிக்கிறார்கள்.

கடற்புவி அதிர்வும் மானுடரும்

கடற்புவி அதிர்வும் மானுடரும்

சுனாமி (Tsunami) – தமிழர் தாயகத்திலிருந்து ஒலித்த அலறல்களையும் அள்ளிச்சென்றிருந்தது வங்காளக்கடலின் பேரலைகள் என்பது இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம். இச்செய்தி எட்டிய கணத்திலிருந்து நாமெல்லாம் நடைப்பிணங்களாக புகலிடத்தின் இயந்திரச்சுற்றில். ஐபிசியும் தொலைபேசிகளுமாக தகவல்கள் சேரச்சேர ‘மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான்!’. மிகப் பெரிய அவலத்தை தாங்கும் மன இறுக்கத்துடன் பணிக்கு சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

ஊர் சிரிக்குமே

ஊர் சிரிக்குமே

அந்த இளைஞர்கள் இருவருக்கும் ஒரே வயதிருக்கலாம். இரயிலில் பயணித்தபடி பெரிய சத்தத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்குத்தான் சந்திக்கிறார்கள் போல் தெரிகின்றது. ஊர் உறவு விசாரணைகள் என்று ஆளுக்காள் மாறி பரிமாறிக் கொள்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய பேச்சு திரும்பியது. இருவரின் குரலிலும் கவலை தொனித்தது.எனக்கு முதல் விசாரணையில அகதியாக ஏற்க ஏலாது என்று பதில் அனுப்பியிற்றாங்கள். இப்ப மேல கொமிசனுக்கு விண்ணப்பத்தை அனுப்பியிருக்கிறன்.

இலண்டன் மாப்பிளை – பாரிசில் பிரசவம்

இலண்டன் மாப்பிளை – பாரிசில் பிரசவம்

புலம்பெயர் வாழ்வியலில் கலியாணம், தலைப்பிரசவம் என்பதெல்லாம் மிக மிகப் பெரிய ஒத்திகைகளுடன் நிகழ்த்தப்படும் மாபெரும் நிகழ்வாக உருமாறிக் கொண்டே இருக்கின்றன. கோடம்பாக்கம் சினிமாக்களில் மிகையாக்கி காட்டப்படும் பிரசவக் காட்சிகளைப் பார்த்து மிரண்டு அரண்டு, அதுவும் மொழியறிவு போதாத அல்லது வேலை மொழி மட்டுமே நாவரப்பெற்ற அந்நியச்சூழலில் வைத்தியர்களுடன் சைகை மொழிகளுடனும், கடகப்பொதிகளான ஊகங்களுடனும் பலரும் பெற்றேர்களாகியது சுவையான பல கதைகளாகக் கூடும்.

கிட்டப் பார்த்தால் தெரியாதோ

கிட்டப் பார்த்தால் தெரியாதோ

இலண்டனில் உள்ள தமிழ் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றுக்கு கார்ட் விற்பனையில் சில இளைஞர்கள ஈடுபட்டிருந்தனர். தமிழ்க் கடை ஒன்றில் வைத்து ஒரு தமிழ்க் குடும்பத்துக்கு தமது தொலைக்காட்சி பற்றி விளக்கம் அளிக்க முயன்றனர். அது பல உறுப்பினர்கள் கொண்ட பெரிய குடும்பமாக இருந்தது. அக்குடும்பத்தின் தலைவியை இளைஞர்கள் அணுகி தமது தொலைக்காட்சியைப் பற்றி விளக்கினர். “எங்கள் தொலைக்காட்சி ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று. நாங்கள் இன்ன, இன்ன நிகழ்ச்சிகளை எல்லாம் ஒளிபரப்புச் செய்கிறோம்” என்று ஆரம்பித்தனர்.

வீடும் வலியும்

வீடும் வலியும்

நான் வேலைக்கு பயணிக்கும் இரயிலில் அடிக்கடி அவரைச் சந்திப்பதுண்டு. ஆனால் ஒருநாளும் பேச வாய்ப்புக் கிடைத்தில்லை. ஏனெனில் அவரை எப்போதும் தூங்கி விழும் நிலையில்தான் நான் காண்பதுண்டு. வாயைப் பிளந்தபடி அருகில் இருப்பவரின் தோளில் தூங்கிச் சரிவதும் அவர்கள் இவரை முறைத்துப் பார்ப்பதும் தள்ளி இருப்பதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. அன்றும் இப்படியான காட்சிதான். நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இரயில் திடீரென பெரிய சத்தத்துடன் குலுங்கி நின்றது.

செம்மொழி என்றால் என்ன சார்?

செம்மொழி என்றால் என்ன சார்?

காலை எழுந்து இணைய வெளியில் உலாவியபோதே உற்சாக மனநிலை தோன்றிவிட்டது. வேலைத்தலமான “இன்ரநெற்கபேக்கு” (Internet Cafe) வரும்போது கொஞ்சம் தெம்போடு கலந்த துள்ளல் நடை இருக்கவே செய்தது. தமிழகமக்களின் வாக்களிப்பும், தமிழகக்கட்சிகளின் இறுக்கமான போக்கும் தந்திருந்த ஆச்சரியங்களுக்கு அப்பால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருந்தது அப்துல் கலாமின் நாடாளுமன்ற உரையும், செயற்திட்ட அறிக்கையும். வீறார்ந்த ஈழப்போராட்டம் புறநிலையில் புலப்படுத்தும் அதிர்வுகளின் சமிக்ஞை என்கிறது உள்மனம்!

விளம்பரம் Lunarpages.com Web Hosting
காப்புரிமை: © 2002 - 2009 அப்பால் தமிழ் - அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது | வலையமைப்பு: ntwoseven | நன்றி: wordpress