‘மாயினி’ நாவலும் ஈழத்து அரசியலும்

செய்ன் நதிக்கரை தமிழிலக்கிய வட்டம் நடத்திய மாயினி நாவல் அறிமுகமும் விமர்சனமும் நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடந்தேறியது. திரு.மாணி.நாகேஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் இலக்கியம், வரலாறு, தத்துவம் ஆகிய முக்கோணப் பார்வையை முறையே தா.பாலகணேசன், கி.பி.அரவிந்தன், க.வாசுதேவன் ஆகியோர் முன்வைத்தனர். இந்நிகழ்வுக்கு அவுஸ்ரேலியாவில் தற்போது தங்கியிருக்கும் மாயினி நாவலின் படைப்பாளர் எஸ்பொ ஒலிப்பதிவில் வழங்கிய வாழ்த்துச் செய்தி முழுமையாக இங்கே இடம்பெறுகின்றது.
November 23, 2008 | பிரிவுகள்: நூல்நயம் | மேலும் வாசிக்க »


