
சிலவேளை மாடுகள் பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன. மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள். மிஞ்சியிருக்கும் இரண்டு மாடுகளின் சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன. மாதாவின் தலை அவளது கைகளுக்கு எட்டாமல் விழுந்திருக்கிறது. மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும். தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில் வாழுகிற மாடுகளாயிருந்தன. தடைசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன. ஒரு குழந்தை வாய்க்காலில் மறைந்து தப்பியிருக்க மாட்டுக்கன்றுகள் பால் காயு முன்பாகவே இறந்து கிடக்கின்றன.
January 1, 2009 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

போரே தீர்வென்று கோடுகளின் கீழாய் எழுதிச் செல்கிறேன் எல்லாம் மாறி உடைத்த பொழுதும் போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை யுத்தம் உன்னையும் என்னையும் தின்பதற்காய் காத்திருக்கிறது காலம் நம்மிடம் துப்பாக்கியை வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது. கருத்தப்பூனையைப்போல கருணாநிதி மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார் நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து பூனைகள் வெளியேறுகின்றன வாய் கட்டப்பட்டவர்களின் பேரணிகளிலும் பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.
November 12, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

இராணுவப் பீரங்கிகளுக்குள் அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர் குருதிச்சுனையில் புதைந்த கவசவண்டிகள் அப்பாவிகளின் பிணங்களின் மேல் நகர்த்தப்படுகின்றன துப்பாக்கிகளின் ஒவ்வொரு தோட்டாக்களிலும் மனித உயிர்கள் குடியிருந்தன நாளைய பகல்கள் இன்றைய இரவுகளைக் கொடுத்து வேண்டப்பட்டுக் கொண்டிருந்தன நாளைய தீபாவளிக்குபட்டாசு வெடிக்கும் கனவுடன் தூங்கிய பிஞ்சுகளை எறிகணைகள் பட்டாசுகளாய் பிய்த்துப் போகிறன.
November 11, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்ட படைகளின் உடல்களை கணக்கிட்டு பார்த்தபடி சிதைந்த உடல்கள் கிடக்கும் மைதானத்தில் பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த சனங்கள் நிறைகின்றனர். பக்கத்து வீட்டில் போராளியின் மரணத்தில் எழுகிற அழுகையுடன் இன்றைக்கு நாலாவது தடவையாக திடுக்கிட்டு எழும்பிய அம்மா
September 17, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

இப்படியாக இருந்து வரும் நாளொன்றில் இங்கோர் ஈரவலயக் காட்டினில் புயலடித்து ஓய்ந்திருந்தது. தூறல் மழையும் ஈரலித்த காற்றும் ஓயாதிருந்தது. வேனிற் காலமும் தள்ளிப் போயிற்று. குழந்தைகளோ புயல் துழாவிச் சென்ற காட்டினைக் காணவும் அக்காட்டிடை உலவவும் ஆவல் கொண்டிருந்தனர். அவர்தம் ஆவல் மேலிட வீட்டின் மூலை முடுக்கிலும் புத்தக அடுக்கிலும் நாற்புற சுவரிலும் தொங்கத் தொடங்கின காடுகள். காடென்றால் பெரு விருட்சங்களும் நெடு மரங்களும் பற்றைகளும் செடி கொடிகளுமாய் அடர்ந்து கிடக்கும் காடுகளவை.
September 16, 2008 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »