insurance, versicherung, mobile, phone, sales, tax, download, security, mortgage, download, upload, krankenversicherung, private

பிரிவு: ‘கட்டுரை’

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும்

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும்

தினமும் கிடைக்கும் வன்னிச் செய்திகள் மனதை பிழிந்தெடுக்கின்றன. உடனே நண்பர் கருணாகரன் எப்படி இருக்கின்றாரோ! திருமாஸ்டர் எப்படி இருப்பார், திருவையாறில் இருந்த நிலாந்தன் எங்கிருப்பார். அமரதாஸ், வளநாடன், இனுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் எல்லாம் என்னவானார்கள், எங்கிருக்கிறார்களோ. ஒவ்வொரு முறை வன்னிச் செய்திகளை கேட்க நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனதில் எண்ணங்கள் எழும். ஆனால் இவர்கள் மட்டுமா எனது உறவுகள். அங்கு மரத்தின் கீழ் மழை பெய்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் அல்லல்படும் இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும்தானே நமது உறவுகள். என்ன செய்வது மனித மனம் என்னதான் விசாலமான பார்வைகளை சேமித்துக் கொண்டாலும் சில வேளைகளில் அதனையும் கடந்து நமக்கு நெருக்கமான உறவுகளை தேடத்தான் செய்கிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடந்திருக்குமோ என்று மனம் பதறுகிறது.

ஈழத் தமிழர்களின் மரபான இசையும் நடனமும்

ஈழத் தமிழர்களின் மரபான இசையும் நடனமும்

ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள ஈழத்தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியி;ல் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

திருக்கோணமலையில் கவிஞர் சுவியின் நினைவு கூரல்

திருக்கோணமலையில் கவிஞர் சுவியின் நினைவு கூரல்

கவிஞர் சு.வில்வரத்தினம் மறைந்து இரண்டாண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் அவரை நினைவு கூரும் வகையில், அவரது மறைவு தினமான  09-12-2008 அன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலை கலை இலக்கிய நண்பர்களும், ‘நீங்களும் எழுதலாம்’ சஞ்சிகையும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வானது எழுத்தாளர் நந்தினிசேவியர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. செ.யோகராசா ‘சு.வியின் கவிதைகளில் பாடு பொருள்’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
நந்தினி சேவியர் தனது தலைமையுரையில், கவிஞர்.சு.விக்கும் தனக்கும் உள்ள [...]

எழுத்துலக மௌனம்

எழுத்துலக மௌனம்

”இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை”

ஒற்றுமையை ஓதுவோருக்கு

ஒற்றுமையை ஓதுவோருக்கு

இப்போதெல்லாம் உங்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் கொஞ்சம் அதிகம்தான். எந்தன் நினைவரங்கில் நிழல்களாய் உறைந்து கிடந்த உங்களில் பலரின் முகங்களெல்லாம் ஒளிபெற்றிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதேவேளையில் உங்கள் உரையாடல்களில் நம்பிகைத் தொனி இழையோடி இருந்ததையும் நான் கவனித்தேன். அதனை விடவும் உங்கள் குழந்தைகள் வாஞ்சையுடன் என்னை உறவு சொல்லி அழைத்து விளக்கம் கேட்பதையும், என்னுடன் நட்பு கொள்ள விரும்புவதையும், நான் அங்கிருந்த அப்போதைய காலத்தில் தாங்களும் என்னுடன் நட்புகொள்ளும் வயதினராக இல்லையே என ஏக்கம் தெரிவித்தையும் நம் தோழமைப் பணிகளுக்கு கிடைத்த மரியாதையாகவே கருதுகின்றேன்.

மாதுமையின் கவிதை பற்றிய சிறுகுறிப்பு

மாதுமையின் கவிதை பற்றிய சிறுகுறிப்பு

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்” இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டாது. வர முடியாது என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.

முதியோர் இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

முதியோர் இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும். உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மண்ணகத்துப் பூந்துளிகளையும், குறிஞ்சித் தேனையும், கரிப்பு மணிகளையும் தமிழறிந்த எந்த வாசகரும் மறந்திருக்க முடியாது. இந்தளவு புகழின் உச்சியிலிருந்த ஒரு மிகப் பிரபல எழுத்தாளருக்கு ஏனிந்த பாதுகாப்பற்ற நிலை?

‘பாயும்புலி பண்டாரவன்னியன்” எழுதிய கருணாநிதியும் முதல்வர் கருணாநிதியும்

‘பாயும்புலி பண்டாரவன்னியன்” எழுதிய கருணாநிதியும் முதல்வர் கருணாநிதியும்

கருணாநிதிக்கும் அது நிகழ்ந்திருக்கிறது. நான் நினைத்துப் பார்ப்பதுண்டு ஒரு வேளை கருணாநிதி இருபது வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தால் ஒரு சிறந்த தமிழ் தலைவராக அவரை வரலாறு பதிவு செய்திருக்கும். ஆனால் இனி எஞ்சியிருக்கும் காலத்தில் இழந்ததை எல்லாம் அவரால் இட்டுநிரப்ப முடியுமானால் அது ஆச்சரியமானதே!

‘பாயும்புலி பண்டாரவன்னியன்” எழுதிய கருணாநிதியும் முதல்வர் கருணாநிதியும்..

‘பாயும்புலி பண்டாரவன்னியன்” எழுதிய கருணாநிதியும் முதல்வர் கருணாநிதியும்..

எழுத்தின் துயரம் என்னவென்றால் ஒரு காலத்தில் நாம் பெரிதாக எண்ணியவர்களை நாமே ஒன்று மில்லை என்று உணர்ந்து நிராகரிக்க நேர்வதுதான். முன்னர் ஒரு காலத்தில் நான் தேடித் தேடி வாசித்த ஜெயகாந்தன் இந்துத்துவ பார்ப்பனிய சக்திகளின் காலைப்பிடித்துக் கொண்டிருந்த போது, சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டுரையை எழுத நேர்ந்தது. ஜெயகாந்தன் மீது எனக்கென்ன கோபம்?

சிங்களவர்களின் ராஜதந்திரம்

சிங்களவர்களின் ராஜதந்திரம்

ஒரு பத்திரிகையாளன் சிறப்பாகச் செயல்படச் சில யுக்திகள் உண்டு. இந்த யுக்திகளை வாசகர்களும் அறிந்துகொள்வது நலம். களத்திலிருந்து வரும் செய்திகளுக்கு வலுசேர்க்க, பத்திரிகையாளன் வரலாறு மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளிலிருந்து பல சான்றுகளையும் புரிதல்களையும் மேற்கோள்களாகக் காட்டி, நிழ்வுகளின் அரசியல், சமுதாய மற்றும் பொருளாதாரப் பின்னணியை வாசகனுக்குத் தர முயலுகிறான். கடந்த இரண்டு வாரங்களாக நான் பாகிஸ்தானில் பயணம் செய்ய வேண்டிய அலுவல்.

விளம்பரம் Lunarpages.com Web Hosting
காப்புரிமை: © 2002 - 2009 அப்பால் தமிழ் - அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது | வலையமைப்பு: ntwoseven | நன்றி: wordpress