மடம் வீட்டு வேலை

மாலதி பாரிஸ் நகரை அண்டிய புறநகர்ப் பகுதியில் கடந்த பத்தாண்டு காலமாக வாழ்ந்து வருகிறாள். இங்கு வந்து பெரிதாக வேலை என்று பார்த்ததில்லை. ஆனால் தாயகத்தில் நீண்ட காலம் வேலை பார்த்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவம் இந்த நாட்டிற்கு உதவாது. என்றாலும் மனதிற்குள் ஓர் உழைச்சல். ஐந்து வயதில் பாடசாலைக்குப் போனதிலிருந்து தொடர்ந்து படிப்பு பின்னர் வேலை என்றிருந்த அவளுக்கு பிரான்சுக்கு வந்து வீட்டிற்குள் இருப்பது மனஅழுத்தத்தைத் கொடுத்தது.



