போரும் வாழ்வும்

ஒரு பத்திரிகையாளன் சிறப்பாகச் செயல்படச் சில யுக்திகள் உண்டு. இந்த யுக்திகளை வாசகர்களும் அறிந்துகொள்வது நலம். களத்திலிருந்து வரும் செய்திகளுக்கு வலுசேர்க்க, பத்திரிகையாளன் வரலாறு மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளிலிருந்து பல சான்றுகளையும் புரிதல்களையும் மேற்கோள்களாகக் காட்டி, நிழ்வுகளின் அரசியல், சமுதாய மற்றும் பொருளாதாரப் பின்னணியை வாசகனுக்குத் தர முயலுகிறான். கடந்த இரண்டு வாரங்களாக நான் பாகிஸ்தானில் பயணம் செய்ய வேண்டிய அலுவல்.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட வேளையில் சில ஈழப்போராளிகள் உட்பட பலரிடமும் அரசியல் தீர்வு பற்றிய ஒரு மயக்கநிலை தோற்றம் பெற்றிருந்தது. ஈழப்போராட்டத்தின் பின்தளமாக இருந்த தமிழ்நாட்டை விட்டு பணியகங்களையும் மூடிவிட்டு ஈழப்போராளிகள் தாயகத்திற்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அப்போது நான் ஈழநண்பர் கழகத்தின் வெளியீடாக வந்துகொண்டிருந்த ‘நட்புறவுப்பாலம்” இதழில் ‘விடைபெறும் நேரம்..” என ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் இறுதிவரிகளாக ‘நண்பர்களே இது விடைபெறும் நேரம்தானா என்பது தீர்மானமாகவில்லை.