
தினமும் கிடைக்கும் வன்னிச் செய்திகள் மனதை பிழிந்தெடுக்கின்றன. உடனே நண்பர் கருணாகரன் எப்படி இருக்கின்றாரோ! திருமாஸ்டர் எப்படி இருப்பார், திருவையாறில் இருந்த நிலாந்தன் எங்கிருப்பார். அமரதாஸ், வளநாடன், இனுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் எல்லாம் என்னவானார்கள், எங்கிருக்கிறார்களோ. ஒவ்வொரு முறை வன்னிச் செய்திகளை கேட்க நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனதில் எண்ணங்கள் எழும். ஆனால் இவர்கள் மட்டுமா எனது உறவுகள். அங்கு மரத்தின் கீழ் மழை பெய்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் அல்லல்படும் இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும்தானே நமது உறவுகள். என்ன செய்வது மனித மனம் என்னதான் விசாலமான பார்வைகளை சேமித்துக் கொண்டாலும் சில வேளைகளில் அதனையும் கடந்து நமக்கு நெருக்கமான உறவுகளை தேடத்தான் செய்கிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடந்திருக்குமோ என்று மனம் பதறுகிறது.
January 15, 2009 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

எழுத்தின் துயரம் என்னவென்றால் ஒரு காலத்தில் நாம் பெரிதாக எண்ணியவர்களை நாமே ஒன்று மில்லை என்று உணர்ந்து நிராகரிக்க நேர்வதுதான். முன்னர் ஒரு காலத்தில் நான் தேடித் தேடி வாசித்த ஜெயகாந்தன் இந்துத்துவ பார்ப்பனிய சக்திகளின் காலைப்பிடித்துக் கொண்டிருந்த போது, சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டுரையை எழுத நேர்ந்தது. ஜெயகாந்தன் மீது எனக்கென்ன கோபம்?
November 12, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

நான் பொதுவாக காலை எழுந்ததும் சிறிது நேரம் வாசிப்பது வழக்கம். அது தெரிவுகளற்ற வாசிப்பு. அன்றும் அப்படித்தான் ஏதாவது வாசிப்போமே என்று நினைத்த நான் எனது புத்தக அலுமாரியில் சிறிது பார்வையை செலுத்தினேன். இப்பொழுதெல்லாம் என்னால் புத்தக அலுமாரிக்கு அருகில் சுதந்திரமாகச் செல்ல முடிவதில்லை. முன் எச்சரிக்கையுடன்தான் செல்ல வேண்டியிருக்கிறது. எனக்கு சிறிது ஆஸ்துமா பிரச்சனை இருப்பதால், தூசு மூக்கில் பட்டால் போதும் அன்று முழுவதும் தும்மல் என்னை ஒரு கை பார்த்துவிடும்.
September 16, 2008 | பிரிவுகள்:
கட்டுரை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »