insurance, versicherung, mobile, phone, sales, tax, download, security, mortgage, download, upload, krankenversicherung, private

Posts tagged with the keyword: ‘தோகை-45’

எழுத்துலக மௌனம்

எழுத்துலக மௌனம்

”இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை”

ஒற்றுமையை ஓதுவோருக்கு

ஒற்றுமையை ஓதுவோருக்கு

இப்போதெல்லாம் உங்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் கொஞ்சம் அதிகம்தான். எந்தன் நினைவரங்கில் நிழல்களாய் உறைந்து கிடந்த உங்களில் பலரின் முகங்களெல்லாம் ஒளிபெற்றிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதேவேளையில் உங்கள் உரையாடல்களில் நம்பிகைத் தொனி இழையோடி இருந்ததையும் நான் கவனித்தேன். அதனை விடவும் உங்கள் குழந்தைகள் வாஞ்சையுடன் என்னை உறவு சொல்லி அழைத்து விளக்கம் கேட்பதையும், என்னுடன் நட்பு கொள்ள விரும்புவதையும், நான் அங்கிருந்த அப்போதைய காலத்தில் தாங்களும் என்னுடன் நட்புகொள்ளும் வயதினராக இல்லையே என ஏக்கம் தெரிவித்தையும் நம் தோழமைப் பணிகளுக்கு கிடைத்த மரியாதையாகவே கருதுகின்றேன்.

மாதுமையின் கவிதை பற்றிய சிறுகுறிப்பு

மாதுமையின் கவிதை பற்றிய சிறுகுறிப்பு

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்” இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டாது. வர முடியாது என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.

‘மாயினி’ நாவலும் ஈழத்து அரசியலும்

‘மாயினி’ நாவலும் ஈழத்து அரசியலும்

செய்ன் நதிக்கரை தமிழிலக்கிய வட்டம் நடத்திய மாயினி நாவல் அறிமுகமும் விமர்சனமும் நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடந்தேறியது. திரு.மாணி.நாகேஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் இலக்கியம், வரலாறு, தத்துவம் ஆகிய முக்கோணப் பார்வையை முறையே தா.பாலகணேசன், கி.பி.அரவிந்தன், க.வாசுதேவன் ஆகியோர் முன்வைத்தனர். இந்நிகழ்வுக்கு அவுஸ்ரேலியாவில் தற்போது தங்கியிருக்கும் மாயினி நாவலின் படைப்பாளர் எஸ்பொ ஒலிப்பதிவில் வழங்கிய வாழ்த்துச் செய்தி முழுமையாக இங்கே இடம்பெறுகின்றது.

முதியோர் இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

முதியோர் இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும். உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மண்ணகத்துப் பூந்துளிகளையும், குறிஞ்சித் தேனையும், கரிப்பு மணிகளையும் தமிழறிந்த எந்த வாசகரும் மறந்திருக்க முடியாது. இந்தளவு புகழின் உச்சியிலிருந்த ஒரு மிகப் பிரபல எழுத்தாளருக்கு ஏனிந்த பாதுகாப்பற்ற நிலை?

நம்மைத் தொடர்கின்ற போர்

நம்மைத் தொடர்கின்ற போர்

போரே தீர்வென்று கோடுகளின் கீழாய் எழுதிச் செல்கிறேன் எல்லாம் மாறி உடைத்த பொழுதும் போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை யுத்தம் உன்னையும் என்னையும் தின்பதற்காய் காத்திருக்கிறது காலம் நம்மிடம் துப்பாக்கியை வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது. கருத்தப்பூனையைப்போல கருணாநிதி மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார் நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து பூனைகள் வெளியேறுகின்றன வாய் கட்டப்பட்டவர்களின் பேரணிகளிலும் பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.

‘பாயும்புலி பண்டாரவன்னியன்” எழுதிய கருணாநிதியும் முதல்வர் கருணாநிதியும்..

‘பாயும்புலி பண்டாரவன்னியன்” எழுதிய கருணாநிதியும் முதல்வர் கருணாநிதியும்..

எழுத்தின் துயரம் என்னவென்றால் ஒரு காலத்தில் நாம் பெரிதாக எண்ணியவர்களை நாமே ஒன்று மில்லை என்று உணர்ந்து நிராகரிக்க நேர்வதுதான். முன்னர் ஒரு காலத்தில் நான் தேடித் தேடி வாசித்த ஜெயகாந்தன் இந்துத்துவ பார்ப்பனிய சக்திகளின் காலைப்பிடித்துக் கொண்டிருந்த போது, சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டுரையை எழுத நேர்ந்தது. ஜெயகாந்தன் மீது எனக்கென்ன கோபம்?

இறைமையின் பெயரால்

இறைமையின் பெயரால்

இராணுவப் பீரங்கிகளுக்குள் அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர் குருதிச்சுனையில் புதைந்த கவசவண்டிகள் அப்பாவிகளின் பிணங்களின் மேல் நகர்த்தப்படுகின்றன துப்பாக்கிகளின் ஒவ்வொரு தோட்டாக்களிலும் மனித உயிர்கள் குடியிருந்தன நாளைய பகல்கள் இன்றைய இரவுகளைக் கொடுத்து வேண்டப்பட்டுக் கொண்டிருந்தன நாளைய தீபாவளிக்குபட்டாசு வெடிக்கும் கனவுடன் தூங்கிய பிஞ்சுகளை எறிகணைகள் பட்டாசுகளாய் பிய்த்துப் போகிறன.

சிங்களவர்களின் ராஜதந்திரம்

சிங்களவர்களின் ராஜதந்திரம்

ஒரு பத்திரிகையாளன் சிறப்பாகச் செயல்படச் சில யுக்திகள் உண்டு. இந்த யுக்திகளை வாசகர்களும் அறிந்துகொள்வது நலம். களத்திலிருந்து வரும் செய்திகளுக்கு வலுசேர்க்க, பத்திரிகையாளன் வரலாறு மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளிலிருந்து பல சான்றுகளையும் புரிதல்களையும் மேற்கோள்களாகக் காட்டி, நிழ்வுகளின் அரசியல், சமுதாய மற்றும் பொருளாதாரப் பின்னணியை வாசகனுக்குத் தர முயலுகிறான். கடந்த இரண்டு வாரங்களாக நான் பாகிஸ்தானில் பயணம் செய்ய வேண்டிய அலுவல்.

விளம்பரம் Lunarpages.com Web Hosting
காப்புரிமை: © 2002 - 2009 அப்பால் தமிழ் - அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது | வலையமைப்பு: ntwoseven | நன்றி: wordpress