insurance, versicherung, mobile, phone, sales, tax, download, security, mortgage, download, upload, krankenversicherung, private

Posts tagged with the keyword: ‘போர்’

போரும் வாழ்வும்

போரும் வாழ்வும்

முறிந்த பனை

முறிந்த பனை

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்

சிலவேளை மாடுகள் பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன. மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள். மிஞ்சியிருக்கும் இரண்டு மாடுகளின் சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன. மாதாவின் தலை அவளது கைகளுக்கு எட்டாமல் விழுந்திருக்கிறது. மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும். தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில் வாழுகிற மாடுகளாயிருந்தன. தடைசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன. ஒரு குழந்தை வாய்க்காலில் மறைந்து தப்பியிருக்க மாட்டுக்கன்றுகள் பால் காயு முன்பாகவே இறந்து கிடக்கின்றன.

மாதுமையின் கவிதை பற்றிய சிறுகுறிப்பு

மாதுமையின் கவிதை பற்றிய சிறுகுறிப்பு

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்” இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டாது. வர முடியாது என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.

நம்மைத் தொடர்கின்ற போர்

நம்மைத் தொடர்கின்ற போர்

போரே தீர்வென்று கோடுகளின் கீழாய் எழுதிச் செல்கிறேன் எல்லாம் மாறி உடைத்த பொழுதும் போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை யுத்தம் உன்னையும் என்னையும் தின்பதற்காய் காத்திருக்கிறது காலம் நம்மிடம் துப்பாக்கியை வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது. கருத்தப்பூனையைப்போல கருணாநிதி மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார் நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து பூனைகள் வெளியேறுகின்றன வாய் கட்டப்பட்டவர்களின் பேரணிகளிலும் பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.

இறைமையின் பெயரால்

இறைமையின் பெயரால்

இராணுவப் பீரங்கிகளுக்குள் அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர் குருதிச்சுனையில் புதைந்த கவசவண்டிகள் அப்பாவிகளின் பிணங்களின் மேல் நகர்த்தப்படுகின்றன துப்பாக்கிகளின் ஒவ்வொரு தோட்டாக்களிலும் மனித உயிர்கள் குடியிருந்தன நாளைய பகல்கள் இன்றைய இரவுகளைக் கொடுத்து வேண்டப்பட்டுக் கொண்டிருந்தன நாளைய தீபாவளிக்குபட்டாசு வெடிக்கும் கனவுடன் தூங்கிய பிஞ்சுகளை எறிகணைகள் பட்டாசுகளாய் பிய்த்துப் போகிறன.

விளம்பரம் Lunarpages.com Web Hosting
காப்புரிமை: © 2002 - 2009 அப்பால் தமிழ் - அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது | வலையமைப்பு: ntwoseven | நன்றி: wordpress