
சிலவேளை மாடுகள் பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில் குண்டுகள் காத்திருந்தன. மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள். மிஞ்சியிருக்கும் இரண்டு மாடுகளின் சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன. மாதாவின் தலை அவளது கைகளுக்கு எட்டாமல் விழுந்திருக்கிறது. மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும். தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில் வாழுகிற மாடுகளாயிருந்தன. தடைசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன. ஒரு குழந்தை வாய்க்காலில் மறைந்து தப்பியிருக்க மாட்டுக்கன்றுகள் பால் காயு முன்பாகவே இறந்து கிடக்கின்றன.
January 1, 2009 | பிரிவுகள்:
கவிதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »

ஒரு சொட்டுப் பூலோகம் தன்காலடியிற் கிடக்க வானத்தை அண்ணாந்து பார்த்தான் மாணங்கி. படர்ந்துகிடந்த மேகங்களைக்கிழித்துக்கொண்டு எந்தப்பேரொளியும் பூலோகத்தைத் தொடுவதாய் தெரியவில்லையே என முணுமுணுத்தான். ‘நொருங்குண்ட இந்த இரவுகளைக் கடக்க நீர் தந்த குப்பிவிளக்குகள் போதவில்லையே என் பரமபிதாவே” என்று அவன் கண்ணீர் வடித்தான். உளைவுமிக்க இரவுகளை அவன் கடக்கமுடியாமற் போனாலும் இரவுகள் அவனைக் கடந்துபோயின. ‘எண்ணெய்ப்பீப்பாய்களை உருட்டிக்கொண்டு பகல் ஒரு வேட்டைநாயைப்போல வருகிறது எழுந்திரு மாணங்கி, எழுந்திரு” என்று உலுப்பியெழுப்பினான் கிழவன்.
September 15, 2008 | பிரிவுகள்:
கதை,
வண்ணச்சிறகு |
மேலும் வாசிக்க »