அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 04 October 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 23 arrow யாதும் ஊரல்ல யாவரும் கேளீர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


யாதும் ஊரல்ல யாவரும் கேளீர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்  
Monday, 12 December 2005

ஊரின்றி ஒதுக்கப்பட்டவர்கள்,
ஊரை விட்டுத் தப்பிப் போனவர்கள்,
தன்னூர் இன்றி வேறூர் போனவர்கள்,
அனைவரும் கூடி
அடைக்கலம் புகுந்த ஊரில் நின்று
ஆர்ப்பரித்தார்கள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என ஆனந்தக் கோசம் எழுப்பினார்கள்.

ஊர்களெல்லாம் உள்ளூர நகைத்துக் கொண்டன
ஊரற்றவர்களெல்லாம் எம்மூரைத்
தம்மூராக்கத் தாராள வேடம்
போடுகின்றனர்  உள்ளுர்க்காரர்கள்
தங்களுக்குள் கண்ணைச் சிமிட்டிக்
கூறிக்கொண்டார்கள்.

ஊரற்றவர்களெல்லாம் நாணிக்கொண்டனர்.

ஊரற்றவர்களே,
எவ்வூரும் உங்களுரல்ல
நீங்கள் ஊரற்றவர்கள்
அவ்வளவுதான்.

உங்களுக்கென  ஊரிருந்தால்
மட்டும் உரையுங்கள்
யாதும் ஊரென்றும்,
யாவரும் கேளிர் என்றும்.

இல்லாதோர் தாம் வள்ளலென்றால்
உள்ளோர்தான் நகைப்போரன்றோ.

*10. 07. 2005


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 04 Oct 2023 00:57
TamilNet
HASH(0x55df281799e8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 04 Oct 2023 01:09


புதினம்
Wed, 04 Oct 2023 00:57
















     இதுவரை:  24072707 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3597 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com